14ம் நாளாக (28/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது

பிரித்தானியா நெதர்லாந்து பெல்சியம் லுக்சாம்பூர்க் மற்றும் யேர்மனி நாடுகளில் உள்ள முக்கிய அரசியல் மையங்களில் சந்திப்புக்களை மேற்கொண்டு நேற்று 28/02/2022 Baden Baden, Kehl மாநகரங்களில் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் அதற்கு யேர்மனி வெளிநாட்டமைச்சிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனு ஒப்படைக்கப்பட்டது. மேலும் பிரான்சு நாட்டிற்குள் உள் நுழைந்து தொடர்ந்தும் ஐரோப்பிய ஆலோசனை அவையில் முக்கிய சந்திப்புக்களை நடத்தி கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு தமிழர்களின் வேணவாக்களினை மனித நேய செயற்பாட்டாளர்கள் ஐய்யம் திரிபின்றி இடித்துரைத்தனர்.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்”- தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

About The Author

உங்கள் கவனத்திற்கு